தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகனங்கள் மோதி விபத்து: 2 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் - trichi chennai NH

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்த வாகனங்கள் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அடுத்தடுத்த வாகனங்கள் மோதி விபத்து

By

Published : Jul 19, 2019, 3:45 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தின் வல்லாபுரம் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தானது டேங்கர் லாரி மீது மோதி நின்றது.

இதனால் அடுத்தடுத்து வந்த அரசுப்பேருந்து, ஈச்சர் லாரி, அரசு விரைவுப் பேருந்து ஆகிய வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டதில் அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநர் மாரிமுத்து, பேருந்தில் பயணம் செய்த பயணி உட்பட இரண்டு பேர் பரிதாபமாக பலியானார்கள்.

மேலும் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்ட பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details