பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சி சொக்கநாதபுரத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வாயிலாக 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் ககன்தீப்சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பெரம்பலூர் மாவட்டத்தில் 2014ஆம் ஆண்டு 170 விவசாயிகளை ஒருங்கிணைத்து, உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது. அந்நிறுவனம் தற்போது 14 மாவட்டங்களைச் சேர்ந்த 1,008 உறுப்பினர்களுடன் செயல்பட்டுவருகிறது.