தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 23, 2020, 7:44 PM IST

ETV Bharat / state

சர்ச்சைக்குரிய செய்திகளை கிளப்ப நினைக்கும் சிலர் -பிரிசில்லா பாண்டியன் பகீர்

பெரம்பலூர்: தமிழ்நாட்டில் சில கூட்டம் சர்ச்சைக்குரிய செய்திளை கிளப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

tmmk secretary priscilla pandian press meet, பிரிசில்லா பாண்டியன் பேட்டி, ஜான் பாண்டியன் மனைவி, wife of john pandian
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் பேட்டி

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் செயல் வீரர்கள் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நேர்காணல் கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் கலந்துகொண்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், கட்சிப் பணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் கருத்துரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரிசில்லா பாண்டியன், தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கின்றோம். எதிர்காலத்தில் தேர்தல் நேரத்தில் பொதுக்குழு கூட்டி கூட்டணி முடிவு எடுக்கப்படும் என்றார்.

நேபாளத்தில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு !

ரஜினி விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய அவர், ஒவ்வொரு கட்சிக்கும், அரசியல்வாதிக்கும், தனிமனிதனுக்கும் சுயமாக பேசுவதற்கு உரிமை உண்டு. ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார் என்றால் அவருடைய பேச்சை சர்ச்சைக்குரிய செய்திகளாக ஆக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு செயல்படுகிற கூட்டம் இருப்பதாக தெரிவித்தார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details