தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி! - boy dead

பெரம்பலூர்: கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி உடலை மீட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

By

Published : May 19, 2019, 11:49 AM IST

பெரம்பலூர் மாவட்டம், ஆயக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்களான தங்கவேல் மகன் தனுஷ். இவர் தன்னுடைய நண்பர்களுடன், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான கிணறு அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தனுஷ் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனிடையே அங்குள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், இரண்டு மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு கிணற்றில் தவறி விழுந்த தனுஷின் சடலத்தை மீட்டனர். பின்னர் உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

ABOUT THE AUTHOR

...view details