பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காருகுடி கிராமத்தில் அருள்மிகு அய்யனார் திருக்கோயில் உள்ளது. பிரசித்திப் பெற்ற இத்திருக்கோயிலில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதனிடையே நேற்று (ஜூன் 28) மாலை பூசாரி பூஜை நடத்திய பிறகு கோயிலை சாத்திவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து இன்று (ஜூன் 29) காலை அவ்வழியாகச் சென்றவர்கள் கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து மங்களமேடு காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.