தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கிய ஆசிரியர் - tamil latest news

பெரம்பலூர்: அரசு பள்ளி ஆசிரியர் கரோனா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, தனது ஒரு மாத சம்பளத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாத சம்பளத்தை வழங்கிய ஆசிரியர்
ஒரு மாத சம்பளத்தை வழங்கிய ஆசிரியர்

By

Published : May 11, 2020, 3:42 PM IST

கரோனா தொற்று காரணமாக மத்திய அரசும், மாநில அரசும் நிதித் தேவைக்காக பொதுமக்களிடம் உதவியை நாடியுள்ளது. இத்தருணத்தில் தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.

ஒரு மாத சம்பள காசோலை

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையன். இவர் கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

ஒரு மாத சம்பளத்தை வழங்கிய ஆசிரியர்

இந்த நிலையில் ஆசிரியர் பொன்னையன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம், தனது ஒரு மாத சம்பளமான 44 ஆயிரத்து 717 ரூபாயை கரோனா தடுப்பு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். ஆசிரியரின் இச்செயல் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் வெறிச்செயல்: எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் கலங்கவைக்கும் வாக்குமூலம்!

ABOUT THE AUTHOR

...view details