கரோனா தொற்று காரணமாக மத்திய அரசும், மாநில அரசும் நிதித் தேவைக்காக பொதுமக்களிடம் உதவியை நாடியுள்ளது. இத்தருணத்தில் தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையன். இவர் கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.