தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் தகராறு: பார் உரிமையாளர் மண்டை உடைப்பு!

பெரம்பலூர்: நக்கசேலம் பகுதியில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில், டாஸ்மாக் உரிமையாளர் மண்டை உடைக்கப்பட்டு, கடையும் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Apr 25, 2021, 8:34 AM IST

டாஸ்மாக்
குடிபோதையில் தகராறுபார் உரிமையாளர் மண்டை உடைப்பு!

பெரம்பலூர் அருகே நக்கசேலம் பகுதியில் டாஸ்மாக் கடையில், அருகிலுள்ள அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அவர்கள் மதுபோதையில் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வந்த பார் உரிமையாளர் செல்வராஜ் என்பவரை, தகராறில் ஈடுபட்டவர்கள் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.

தாக்கப்பட்ட பார் உரிமையாளர்

இதனால் பார் உரிமையாளர் செல்வராஜ் தலை, கையில் காயம் ஏற்பட்டது. மேலும் பாரில் வேலை செய்தவர்களையும் தாக்க முயன்ற கும்பல் பாரின் மேற்கூரையையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

அருகில் இருந்த டாஸ்மாக் கடை மீதும் பாட்டில் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராறில் காயமடைந்த பார் உரிமையாளர் செல்வராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி தகவலறிந்த பாடாலூர் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு: அமலுக்கு வந்த கட்டுபாடுகள்!

ABOUT THE AUTHOR

...view details