பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் ஆனையப்பன் என்பவரது பசு மாடு மேய்ச்சலுக்குச் சென்றபோது, நான்கு அடி செப்டிங் டேங்கில் எதிர்பாராதவிதமாக விழுந்தது. இதனையடுத்து பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
செப்டிங் டேங்கில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு - survival of a cow that fell into a septic tank
பெரம்பலூர்: செப்டிங் டேங்கில் எதிர்பாராதவிதமாக விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
பசு மாடு உயிருடன் மீட்பு
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், செப்டிங் டேங்கில் தவறி விழுந்த பசு மாட்டை ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்டனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் சாலையில் நடந்து சென்ற நபரை ஆக்ரோஷமாக தாக்கிய மாடு!