தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடைக்கால நுண்கலை பயிற்சி முகாம் - ஆர்வத்துடன் பங்கேற்ற குழந்தைகள்!

பெரம்பலூர்: தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சார்பில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறுவர்-சிறுமியர்களுக்கென சிறப்பு நுண்கலை பயிற்சி முகாம் தொடங்கியது.

By

Published : May 3, 2019, 5:41 PM IST

சிறப்பு நுண்கலை பயிற்சி முகாம்

தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும், கோடை காலங்களில் சிறுவர் - சிறுமியர்களுக்கென நுண்கலை பயிற்சி முகாம் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று தொடங்கியது.

கோடைகால சிறப்பு நுண்கலை பயிற்சி

வரும் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த பயிற்சி முகாமில், 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு சிலம்பம், இசை, பரதநாட்டியம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த முகாமின் நிறைவு நாளன்று, பயிற்சி எடுக்கும் ஒவ்வொறு குழந்தைக்கும் கலை பண்பாடுத்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details