வீட்டுக்குள் புகுந்த மழை நீர்; பொதுமக்கள் அவதி! - பெரம்பலூர்
பெரம்பலூர்: நேற்று தொடர்ந்து இரண்டு மணி நேரம் பெய்த கன மழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
![வீட்டுக்குள் புகுந்த மழை நீர்; பொதுமக்கள் அவதி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4183552-thumbnail-3x2-rain.jpg)
Rain water enter in the house
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில் நேற்று பெய்த மழையால் பெரம்பலூர் நகர்ப்புற பகுதிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் அவ்வையார் நகர் 1வது வீதி, 2வது வீதி ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் இருப்பதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
வீட்டுக்குள் புகுந்த மழை நீர்!