பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள், இயற்கை உபாதையைக் கழிக்க பொது இடத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தினர் சிலர், பட்டியலின மாணவர்களை மலம் அள்ள சொல்லி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்களது வீட்டில் நடந்த சம்பவத்தை கூறியதால் இந்த விசயம் வேகமாய் பரவியது.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களை மலம் அள்ள வைத்த நபர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.