ஜனவரி 30ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.