தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துறைமங்கலத்தில் செய்தியாளர்களுக்குக் கரோனா பரிசோதனை - துறைமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு கரோனா பரிசோதனை

பெரம்பலூர்: துறைமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது.

press people tested for corona in perambalur Thuraimangalam
press people tested for corona in perambalur Thuraimangalam

By

Published : Apr 27, 2020, 12:50 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று, வேகமாகப் பரவி வரும் நிலையில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரிலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனிடையே பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளிதழ்களில் பணியாற்றுபவர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களுக்குக் கரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இதனை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா பார்வையிட்டார்.

இந்தப் பரிசோதனையில் நாளிதழ்கள், தொலைக்காட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் பரிசோதனை எடுத்துக்கொண்டனர்.

துறைமங்கலத்தில் செய்தியாளர்களுக்குக் கரோனா பரிசோதனை

இதையும் படிங்க... போக்குவரத்து காவலருக்கு கரோனா - 41 பேருக்கு பரிசோதனை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details