தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி மன்ற துணை தலைவரை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு! - பெரம்பலூர் செய்திகள்

பெரம்பலூர் அருகே ஊராட்சி மன்ற துணை தலைவரை கண்டித்து, ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர்.

perambalur news  perambalur latest news  petition against Vice President of the Panchayat Council in perambalur  petition against Vice President of the Panchayat  President of the Panchayat Council gave petition against Vice President in perambalur  Vice President  Panchayat Council  ஊராட்சி மன்ற துணை தலைவர் மீது மனு  பெரம்பலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் மீது மனு  மனு  பெரம்பலூர் செய்திகள்  முற்றுகை
பெரம்பலூர் அருகே ஊராட்சி மன்ற துணை தலைவரை கண்டித்து மனு...

By

Published : Jun 24, 2021, 2:44 PM IST

பெரம்பலூர்: குன்னம் வட்டம் பென்னக்கோணம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஜெயலெஷ்மி இளங்கோவன். இவர் துணை தலைவராக உள்ள செல்வராணியைக் கண்டித்து, வார்டு உறுப்பினர், தூய்மை பணியாளர்களுடன் சேந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தார்.

மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது,

துணை தலைவராக உள்ள செல்வராணி செல்வகுமார் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்காததால் நிர்வாக பணி செய்ய முடியவில்லை. மேலும் துணை தலைவர் ஊராட்சி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கூடிய காசோலை உள்ளிட்டவற்றில் கையொப்பம் இட மறுப்பதால், மூன்று மாத காலமாக தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் இயக்குபவர்களுக்கு ஊதியம் வழங்க வில்லை.

மேலும் துணை தலைவர் நிர்வாக பணிக்கு ஒத்துழைப்பு வழங்காததால், மாற்றுத் துணை தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” எனக்கூறி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு கொடுத்தனர்.

இதையடுத்து கரோனா சமயத்தில் தங்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் தீம் பாடல் வெளியானது!

ABOUT THE AUTHOR

...view details