பெரம்பலூர் நகர்ப்புற பகுதியில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பாலத்தின் அடியில், துறையூர் சாலை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் பலர் தங்க வீடின்றி வாழ்ந்து வருகின்றனர்.
மழை, குளிர் காலங்களில் இவர்களின் பாடு திண்டாட்டம்தான். உடுத்த போதிய ஆடையில்லாத இவர்களுக்கு குளிரைத் தாங்கும் நல்ல போர்வைகள் கூட இல்லை. குளிரில் நடுங்கியபடியே இவர்களின் இரவுகள் விடியும். இதைக் கண்டு வேதனையுற்ற பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கத்தினர் அவர்களுக்கு உதவ முன்வந்தனர்.