தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அரவை தொடக்கம் - சர்க்கரை ஆலையில் அரவை தொடக்கம்

பெரம்பலூர்: குன்னம், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2020-21ஆம் ஆண்டுக்கான அரவைப் பணியினைத் தொடங்கிவைத்தனர்.

perambalur sugar cane mill started their process on 2020-21 year
perambalur sugar cane mill started their process on 2020-21 year

By

Published : Dec 28, 2020, 1:31 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் இறையூர் சர்க்கரை ஆலையில் 2020-21ஆம் ஆண்டுக்கான அரவை பருவம் இன்று தொடங்கப்பட்டது. குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் அரவையைத் தொடங்கிவைத்தனர்.

அரவைக்குத் தயாராகும் கரும்புகள்

பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சுமார் ஏழாயிரத்து 203 ஏக்கர் பயிரிடப்பட்ட மொத்த கரும்பு மகசூலான சுமார் 2.10 லட்சம் டன், பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2020-21ஆம் ஆண்டிற்கான அரவை பருவத்தில் அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அரவை தொடக்கம்

இந்த அரவை மூலம் சர்க்கரை கட்டுமான அளவு 9.5 விழுக்காடு வரை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிகழ்வில் சக்கரை ஆலை தலைமை நிர்வாகி முகமது அஸ்லாம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி உதவித் தொகையாக வழங்கிய சி.சி.இ.ஏ!

ABOUT THE AUTHOR

...view details