தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு: நிவாரணம் கோரும் சவரத் தொழிலாளர்கள் - ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிப்பு

பெரம்பலூர்: ஊரடங்கினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு தங்களுக்கு நிவாரணமோ, தொழில் செய்ய அனுமதியோ வழங்கவேண்டும் எனவும் முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

perambalur saloon employees given petition to district collector for corona relief
perambalur saloon employees given petition to district collector for corona relief

By

Published : Apr 13, 2020, 2:47 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

நிவாரணம் கோரும் முடி திருத்தும் தொழிலாளர்கள்

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். அல்லது தாங்கள் பணிபுரிய கூடுதல் நேரம் ஒதுக்கிட வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வருவாய் இழந்த தொழிலாளர்களுக்கு ரூ.370 கோடி மதிப்பில் நிவாரணம்!

ABOUT THE AUTHOR

...view details