பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள உழவர் வேளாண் அங்காடியில் பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு சார்பாக இயற்கை வாழ்வியல் அறிஞர் கோ.நம்மாழ்வார் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட நம்மாழ்வார் உருவப்படத்திற்கு மலர் தூவி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனையடுத்து இயற்கை விவசாயம் செய்யும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு 'நம்ம ஊர் நம்மாழ்வார்கள்" பாராட்டு வழங்கப்பட்டது. தொடர்ந்து இயற்கை வேளாண் குறித்து கருத்துரைகள் வழங்கப்பட்டது.