பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தேனூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை இன்று (டிச24) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினருமான ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மருத்துவத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.