தமிழ்நாடு

tamil nadu

ஜெயலலிதா பிறந்தநாளன்று நலத்திட்ட உதவிகள் வழங்க அதிமுகவினர் ஆலோசனை

By

Published : Feb 16, 2020, 11:16 AM IST

பெரம்பலூர்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த தினத்தன்று ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து அதிமுகவினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

perambalur-admk-party-member-meet-discussed-on-jayalalitha-birthday
ஜெயலலிதா பிறந்தநாளில் நலத்திட்டங்கள் வழங்கல்?

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்விழா ஆலோசனைக் கூட்டத்துடன் செயல் வீரர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இது குன்னம் சட்டப்பேரவை உறுப்பினரும் பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளருமான ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

ஜெயலலிதாவின் பிறந்த நாள்விழா ஆலோசனைக் கூட்டம்

இந்தக் கூட்டத்தில் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன், ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் கிளைகள் தோறும் கொடி ஏற்றப்பட்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட வேண்டும். ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்றாலே ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அதிமுக தொண்டர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகாசி, மருதை ராஜாவுடன் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள்விழா ஆலோசனைக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details