தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 7, 2020, 3:39 PM IST

ETV Bharat / state

பட்டா கேட்டு புகார்.. பஞ்சாயத்துக்காரர்களின் மிரட்டல்

பெரம்பலூர்: பஞ்சாயத்துக்காரர்களின் எச்சரிக்கையை அடுத்து தங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

people of Vannaramboondi petitioned the Perambalur Collectorate asking for a land
people of Vannaramboondi petitioned the Perambalur Collectorate asking for a land

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம வண்ணாரம் பூண்டி கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றனர்.

இதனிடையே அவர்களில் ஒருவரின் வீடு இடிந்து விழுந்த காரணத்தினால் ஓட்டு வீடாக மாற்றி அவர் கட்டியுள்ளார். ஊர் பஞ்சாயத்துக்காரர்கள் அவ்வாறு வீடு கட்டக்கூடாது என்றும் அப்படி மீறி கட்டினால் இங்கு வசிக்கும் அனைவரின் வீட்டையும் அகற்றி விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் கோரிக்கை மனு அளித்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details