காலியாகும் அமமுக கூடாரம்! - கட்சி மாறிய அமமுக நிர்வாகிகள்
பெரம்பலூர்: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
![காலியாகும் அமமுக கூடாரம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3837354-thumbnail-3x2-ammk.jpg)
ammk
பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அவைத்தலைவர் ரமேஷ், அக்கட்சியின் விவசாயப் பிரிவுச் செயலாளர் நடராஜன் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் அமமுகவிலிருந்து விலகி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதிமுகவிற்கு தாவிய 250 அமமுகவினர்