பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஸ்ரீ வெங்கட பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பெரம்பலூரில் மராத்தான் - 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம்
பெரம்பலூர்: மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், மராத்தான் ஒட்டம் நடைபெற்றது.
![100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பெரம்பலூரில் மராத்தான் Marathon in Perambalur insisting on 100% voting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10975081-674-10975081-1615528860403.jpg)
Marathon in Perambalur insisting on 100% voting
பாலக்கரையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், வெங்கடேசபுரம், கடைவீதி, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு சென்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
இந்த மாரத்தான் போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.