தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகை கடையில் கொள்ளை - மூன்று பெண்கள் உள்ளிட்ட ஏழுபேருக்கு வலை - perambalur police investigation

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே நகை கடையில் வெள்ளிக் கொலுசை திருடிச் சென்ற மூன்று பெண்கள் உள்ளிட்ட ஏழுபேரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கொள்ளையில் ஈடுபட்ட பெண்கள்

By

Published : Oct 20, 2019, 6:18 AM IST


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா லப்பைக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவர் வாலிகண்டபுரம் பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு நேற்று வந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஏழுபேர் கொண்ட கும்பல் நகை வாங்குவது போல விற்பனையாளரை திசை திருப்பி 10-க்கும் மேற்பட்ட வெள்ளி கொலுசுகளை திருடிச் சென்றுள்ளனர்.

இரவில் விற்பனை முடிந்து கொலுசுகளை சரிபார்த்த போது, பத்து ஜோடி கொலுசுகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. உடனே இது குறித்து காவல் துறையில் புகார் அளித்தார்.

கொள்ளையில் ஈடுபட்ட பெண்கள்

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கடையில் இருந்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, நகை வாங்குவதற்கு வந்த ஏழுபேர் கொண்ட கும்பல் கொலுசை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் குறித்துகாவல் துறையினர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பலே கொள்ளையன் முருகன் - ட்ரான்சிட் வாரன்டில் தமிழ்நாடு கொண்டுவர முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details