தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீர் வழங்கல்! - Kapasurak drinking water to boost immunity

பெரம்பலூர்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

_corona_kapasurak_water
_corona_kapasurak_water

By

Published : Apr 3, 2020, 11:26 PM IST

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனிடையே பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சாந்தாதேவி குமார் வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் அவர் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீர்

இதையும் படிங்க: தேசிய ஊரடங்கு உத்தரவு: ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சமூக ஆர்வலர்கள்

ABOUT THE AUTHOR

...view details