தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் தோட்டக்கலைத் துறை சார்பில் நடமாடும் காய்கறி வண்டி தொடக்கம்! - in perambalur vegetable vehicle started by MLA

பெரம்பலூர்: கரோனா ஊரடங்கு எதிரொலியாக, நகராட்சி, தோட்டக்கலைத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் காய்கறி வண்டியை சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர்.

பெரம்பலூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடமாடும் காய்கறி வண்டி தொடக்கம்!
பெரம்பலூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடமாடும் காய்கறி வண்டி தொடக்கம்!

By

Published : Apr 8, 2020, 1:54 PM IST

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதிவரை அமலில் உள்ளதால், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சிரமமின்றி பெறுவதற்கு பெரம்பலூர் நகராட்சி மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் நடமாடும் காய்கறி வண்டி இன்று தொடங்கப்பட்டது.

இதனை குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதையும் படிங்க...காணொலி மூலம் வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி

ABOUT THE AUTHOR

...view details