தமிழ்நாடு முழுவதும் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 21 ஆயிரத்து 183 மாணவ மாணவிகளுக்கும், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 25 ஆயிரத்து 810 மாணவர்களுக்கு அரசு இலவச பாட புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது.