பெரம்பலூர்: தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆதனூர், பிலிமிசை, கொட்டரை மற்றும் புதுக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் டீசல் விலை ஏற்றத்தால் அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பைச் சந்தித்து வரும் நிலையிலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் என்பதால் பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்ற நிலைப்பாட்டையே தொடர முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது குறித்து பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் தற்போது பேருந்து கட்டண உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபட தெரிவித்தார்.