தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற ஊழியர் உயிரிழப்பு!

பெரம்பலூர்: நீதிமன்ற ஊழியர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

By

Published : Apr 11, 2021, 12:21 AM IST

கரோனாவிற்கு இறையாகி உயிரிழந்த நீதிமன்ற ஊழியர்
கரோனாவிற்கு இறையாகி உயிரிழந்த நீதிமன்ற ஊழியர்

வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராசு. இவர் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து திருச்சி ஓயாமாரி இடுகாட்டில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏழு மாதங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: 'வேகமாக பரவி வரும் இரண்டாம் கட்ட கரோனா அலை: அரசு மருத்துவர்கள் அறிவுரை'

ABOUT THE AUTHOR

...view details