தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற வளாகத்தில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி!

பெரம்பலூர்: மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

By

Published : Mar 20, 2020, 11:44 PM IST

Updated : Mar 21, 2020, 12:05 AM IST

நீதிமன்ற வளாகத்தில் கரோனா விழிப்புணர்வு
நீதிமன்ற வளாகத்தில் கரோனா விழிப்புணர்வு

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நீதிமன்றத்தில் பணியாற்றும் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் , ஆகியோருக்கு கைகளை சுத்தம் செய்தல், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் கரோனா விழிப்புணர்வு

மேலும், நீதிமன்ற வளாகம் சுற்றியும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை

Last Updated : Mar 21, 2020, 12:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details