பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது. வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை, கால்நடை துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பாக மொத்தம் 408 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 10 லட்சத்து 56 ஆயிரத்து 303 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சிறப்பு மனுநீதி நாள் நிறைவு முகாமில் குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.