தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு - தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள்

பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்றவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Car accident in national highway
Car hits and one person died in Trichy - chennai national highway

By

Published : May 3, 2020, 10:14 AM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வி.களத்தூர் மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் குமார் (35). இவர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சின்னாறு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, குமார் மீது மோதியது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details