வேப்பூர் புது காலனியை சேர்ந்தவர் பாண்டியன்.இவரது மகன் சக்திவேல் உறவினர்கள் 6 பேருடன் வேப்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார். இச்சிலி குட்டை என்ற இடத்தில் எதிரே வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இரண்டு வயது குழந்தைகள் செம்நிலா, நந்திதா உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் தனம் என்பவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற சக்திவேல், தமிழ்நிலா ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.