தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை - வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

பெரம்பலூர் : வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத பல ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

By

Published : Nov 3, 2020, 4:30 AM IST

பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் தினமும் பல்வேறு வேலைகளுக்கும் அவற்றுக்கு ஏற்றவாறு பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தொலைபேசி அழைப்புகள் மூலம் செய்திகளும், மறைமுகத் தகவல்களும் அம்மாவட்டக் காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று (நவ.02) பெரம்பலூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் திடீரென உள்ளே புகுந்து காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில், ஆய்வாளர்கள் ரத்னாவள்ளி, சுலோசனா, உதவிக் காவல் ஆய்வாளர் பவுன்ராஜ், காவலர்கள் சீனிவாசன், மனோகரன் ஆகியோர் கொண்ட குழுவினர், இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இச்சோதனையில் கணக்கில் வராத பல ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய இந்த திடீர் சோதனையால் வருவாய்த் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ABOUT THE AUTHOR

...view details