தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் குவாரி அமைக்கக்கோரி மாட்டு வண்டித் தொழிலாளர்கள் போராட்டம்! - முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாய தொழிலாளர்கள்

பெரம்பலூர் : மாட்டு வண்டிக்குத் தனியாக மணல் குவாரி அமைக்கக் கோரி, மாட்டுவண்டித் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் பெரம்பலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

agriculture workers mutrugai

By

Published : Nov 14, 2019, 6:36 PM IST

பெரம்பலூர் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

குன்னம் வட்டம் வெள்ளாறு, வேப்பந்தட்டை வட்டம் கல்லாறு ஆகிய இடங்களில் மாட்டு வண்டிக்குத் தனியாக மணல் குவாரி அமைக்கக் கோரியும்; அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் அனுமதி உத்தரவு வழங்கக் கோரியும், மாட்டு வண்டித் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டுவண்டி, விவசாயத் தொழிலாளர்கள்

மேலும், இந்த முற்றுகைப் போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கம், மாட்டு வண்டித் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள், மாநில பொறுப்பாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய மக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details