அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் இணைந்து, நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு செய்வதற்க்காக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மாரத்தான் ஓட்டம் நடைப்பெற்றது.
லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு, ஒட்டப் பந்தயம் நடத்தப்பட்டது.