மரத்தில் அழுகிய நிலையில் தொங்கிய ஆண் சடலம்; அருகில் கிடந்த பெண் சடலம் - பின்னணி என்ன? - புதுச்சத்திரம் அடுத்த ஏளூர் ஏரி பகுதியில்
நாமக்கல் அருகே ஏரியில் உள்ள மரத்தில் அழுகிய நிலையில் தொங்கிய ஆண் மற்றும் பெண் சடலத்தை கைப்பற்றி புதுசத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த ஏளூர் ஏரி பகுதியில் உள்ள மரத்தில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் தொங்கிக் கொண்டும், அதன் அருகே பெண் சடலமும் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் புதுசத்திரம் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் டிஎஸ்பி காந்தி, புதுசத்திரம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் காவலர்கள் மரத்தில் சேலையில் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்த ஆண் சடலத்தையும், அதன் அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.