ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களை குறி வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் - இருவர் கைது! - செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

நாமக்கல்: சாலைகளில் நடந்து செல்லும் பெண்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருடப்பட்ட செல்போன்கள்
திருடப்பட்ட செல்போன்கள்
author img

By

Published : Jan 27, 2021, 3:19 PM IST

நாமக்கல் மாவட்ட நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில் சாலைகளில் நடந்து செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகளிடம் அடையாளம் தெரியாத திருட்டு கும்பல் ஒன்று தொடர்ந்து செல்போன்களை பறித்துச் செல்வதாக காவல் துறையினருக்குத் புகார்கள் வந்துள்ளன.

இந்நிலையில், செல்போன் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை பிடிக்க நகர் பகுதிகளிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த அபுதாகீர் என்பவர் செல்போனை வழிப்பறி செய்வதும், அந்த செல்போன்களை அதே பகுதியில் வசிக்கும் மோகன்ராஜிடம் கொடுத்து அதனை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

in article image
திருடப்பட்ட செல்போன்கள்

இதனையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஒன்பது செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இதுபோன்று சாலைகளில் செல்பவர்களிடம் செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யும் திருட்டு கும்பலை கண்காணிப்புக் கேராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: போதை மருந்துக்காக மருந்துக்கடைகளில் திருடிய இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details