நாமக்கல் மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப். 30) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
அதில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜான் மகேந்திரன், துணைத் தலைவர் ஜவகர் அலி, ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்குச் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கடனுதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன், “தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு இந்திய அளவில் அதிகளவு கடனுதவி பெற்று தரப்பட்டுள்ளது.