தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.200 கோடியை உடனடியாக ஆவின் நிர்வாகம் வழங்கவேண்டும் - Minister rajendrabalaji

நாமக்கல்: பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.200 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என ஆவின் நிர்வாகத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க பொது செயலாளர் முகமது அலி கோரிக்கை வைத்துள்ளார்.

milk-producers-meeting

By

Published : Aug 24, 2019, 9:43 PM IST

நாமக்கல்லில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் மும்மது அலி கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தியது பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் அளிப்பதாக இல்லை. அந்த ரூ.4கூட 4.3 கொழுப்பு சத்தும், 8.2 இதர சத்தும் உள்ள பாலுக்கே கிடைக்கும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள 75% பால் உற்பத்தியில் 4.0 கொழுப்பு சத்தும், 8.0 இதர சத்துதான் கிடைக்கிறது எனவே இது ஒட்டுமொத்த பால் கொள்முதல் விலையில் லாபத்தை தராது. எனவே பால் கொள்முதலை 50லட்சம் லிட்டராக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவை வைத்துள்ள ரூ.200 கோடியையும் உடனடியாக வழங்கவேண்டும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள பால் ஆரம்ப கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு பால் உற்பத்தியாளர்கள் பணத்திலிருந்து 2.5% ஊதியமாக வழங்கப்படுகிறது.

நிலுவையில் உள்ள ரூ.200 கோடியை உடனடியாக ஆவின் நிர்வாகம் வழங்கவேண்டும்

இதை ஆவின் நிர்வாகம்தான் அளிக்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவே தமிழ்நாடு அரசு இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details