நாமக்கல் மாவட்டம் நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் லாரி அதிபர் பொன்னுசாமியுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ. 50 ஆயிரம் முதல் 50 லட்சம் வரை மாதந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.
2019ஆம் ஆண்டு கலைச்செல்வி ஏலச்சீட்டிற்கு பணம் கொடுத்த நபர்களை ஏமாற்றி, தனது உறவுக்கார பெண்ணான மலர்கொடி என்பவர் பெயரில் பல கோடி சொத்துக்களை வாங்கியதாக கூறப்படுகிறது.