சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் அலுவலர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் தேர்தல் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி அவர்கள் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4.57 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.