தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக ரவுடி கொலை: ஒன்பது பேர் சரண்! - கொலை குற்றவாளிகள் சரண்

நாமக்கல்: கிச்சிபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக ரவுடியை கொலை செய்த ஒன்பது பேர் நாமக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

முன்விரோதம் காரணமாக ரவுடி கொலை: ஒன்பது பேர் சரண்
முன்விரோதம் காரணமாக ரவுடி கொலை: ஒன்பது பேர் சரண்

By

Published : Dec 23, 2020, 8:10 PM IST

சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி காலணி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரவுடியை தாக்கிய கும்பல்:

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும் கடந்த பல ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று (டிச.22) மாலை செல்லத்துரை தனது காரில் தனியாக சென்றுகொண்டிருந்தார், அப்போது எதிரே இரண்டு கார்களில் வந்த அடையாளம் தெரியாத கும்பல், காரை வழிமறித்து செல்லத்துரையை சரமாரியாக வெட்டியுள்ளது.

இதில் செல்லத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிச்சிபாளையம் காவல் துறையினர், செல்லத்துரையை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், செல்லத்துரையை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலை தேடி வந்தனர்.

சரணடைந்த கொலை குற்றவாளிகள்:

இந்நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய கிச்சிபாளையத்தைச் சேர்ந்த காதர் உஷேன் (26), பிரபு (29), மணிகண்டன் (23), யுவராஜ் (33), சாரதி (24), பாலமுருகன் (33), சின்னவர் (23), தீனதயாளன் (16), சுரேஷ் (34) ஆகிய ஒன்பது பேரும் இன்று (டிச.23) மதியம் 2 மணியளவில் நாமக்கல் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரணடைந்தனர்.

இதனையடுத்து, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் சரணடைந்த ஒன்பது பேரும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: ரவுடி கொலை: 24 மணி நேரத்திற்குள் ஐந்து பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details