நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா கடந்த 30 வருடங்களாக குழந்தைகளை விற்பனை செய்துவந்த சம்பவம் சில நாட்களுக்கு முன் அம்பலமானது. மேலும், ஆண் குழந்தை வெள்ளையாக 3 கிலோ எடையுடன் இருந்தால் குறைந்தபட்சம் ரூ. 4 லட்சம் வரையும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் வரையும் விற்பனை செய்துவந்த அவரது செயல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனையடுத்து, அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், ராசிபுரம் தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன், கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.