நாளை நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ஒரு வாக்குச்சாவடி மையம் முழுக்க முழுக்கப் பெண் அலுவலர்கள் மட்டுமே பணிபுரியும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர், உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பிற்கு காவலர் என அனைவருமே மகளிர் மட்டுமே பணிபுரிய உள்ளனர்.