நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் அடுத்த கெட்டிமேடு பகுதியில் கோகுல்ராஜ் என்பவரது விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் கேரளா, கோவை, ஈரோடு, ராமநாதபுரம், திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து இறைச்சிக் கழிவுகள், மீன் கழிவுகள், மாமிசக் கழிவுகள் எடுத்து வந்து உலர்த்தி அதனை பவுடராக்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த இறைச்சி கழிவுகளால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், இறைச்சிக் கழிவுகளை அலசும் கழிவுநீர் அப்பகுதியிலேயே தேக்கி வைப்பதால் சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் கூறிய அப்பகுதி பொதுமக்கள், இறைச்சிக் கழிவுகளை உலர்த்த தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.