நாமக்கல் மாவட்டம், பெரிய மணலியில் இருந்து துணிகளை ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி மினி லாரி ஒன்று வந்தது. இந்த மினி லாரியை பெரியமணலியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டிவந்தார். அவருடன் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 5 பேர்கள் வந்தனர்.
இதையடுத்து, நாமக்கல்லிலிருந்து கரூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்தில் மினிலாரி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி பாலத்தின் நடுவே கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த சுரேஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள், சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.