தமிழ்நாடு

tamil nadu

17 பேர் உயிரிழந்த சம்பவம்: நீதி கேட்டு போராடி கைதானவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

By

Published : Dec 5, 2019, 11:09 PM IST

நாமக்கல்: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து17 பேர் உயிரிழந்ததற்கு நீதி கேட்டு போராடிய தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை. திருவள்ளுவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

namakkal protest news
கைதனவர்களை விடுவிக்கோரி ஆர்பாட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அண்மையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நீதி கேட்டு போராடிய தலைவர் நாகை திருவள்ளுவன், மறியலில் ஈடுபட்டவர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இன்று நாமக்கல் மாவட்ட தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோபி தலைமையில் பரமத்திவேலூர் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கைது செய்யப்பட்ட நாகை. திருவள்ளுவன் உள்ளிட்ட போராளிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரியும், தமிழ்நாடு அரசையும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கைதானவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: பணியாளர்களை நியமிக்காமல் அலட்சியம் - அமிலம் கொட்டி 2 மாணவர்கள் காயம்!

ABOUT THE AUTHOR

...view details