தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 4, 2019, 10:53 AM IST

ETV Bharat / state

நாமக்கல்லில் சுதந்திர போராட்ட தியாகி மரணம்!

நாமக்கல்: உப்புச் சத்தியாகிர போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட தியாகி காதர்மொய்தீன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

moideen

மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாகிரகம், கள்ளுக்கடை எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்ற சுதந்திர போராட்ட தியாகி காதர்மெய்தீன்.

நாமக்கல் அஜீஸ் தெருவைச் சேர்ந்த இவர், ரங்கர் சன்னதி தெருவில் நகல், தொலைப்பேசி நிலையத்தை நடத்திவந்தார்.

84 வயதான இவர், கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து, அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றும் காணப்படாத நிலையில், நேற்று மாலை காலமானார்.

சுதந்திர போராட்டம் தியாகி காதர்மொய்தீன் மரணம்

மறைந்த காதர்மெய்தீனின் உடலுக்கு முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க : மகாத்மாவின் 150ஆவது பிறந்த தின கொண்டாட்டம்: 150ரூபாய் நாணயம் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details