நாமக்கல் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்பரவு தொழிலாளியாக பணியற்றி வருபவர் சிவியம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி(26). இவர் இன்று மாலை சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டி பெரியசாமி கோவிலுக்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பயணிகள் ஆட்டோவில் சென்றுள்ளார்.
இவர்கள் சென்ற ஆட்டோ பெரியசாமி கோவிலுக்கு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரத்திலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெரியசாமி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.